Saturday, June 23, 2012

சென்னையில் ரூ.109 கோடியில் மேம்பாலம்

சென்னையில் ரூ.109 கோடியில் மேம்பாலம், சுரங்க, நடை பாதைகள்: முதல்வர்
பதிவு செய்த நாள் : தினமலர் - ஜூன் 22,2012,23:28 IST
"சென்னை: தமிழகம், தற்போது சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வகையில், புதிய சாலைகள், புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கவும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிக்கவும், 3,793 கோடி ரூபாய் கடந்தாண்டு ஒதுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில், 40 கோடி ரூபாய் செலவில் கோயம்பேடு அருகில் மேம்பாலம், எட்டு இடங்களில், 30 கோடி ரூபாய் செலவில், மேம்பாலங்கள், 19 கோடி ரூபாயில், சுரங்க நடைபாதைகள், 20 கோடி ரூபாயில், ஆகாய மேம்பாலங்கள் என 109 கோடி ரூபாயில், திட்டங்களை செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்."

அது சரி. எல்லாப் பணத்தையும் கட்டுமானப் பணிகளுக்கே கொடுப்பது எப்படி நியாயம். கான்டிராக்ட்  கட்சிக்காரர்களுக்கே! அதில் நடக்கும் ஊழல், அதனால் கிடைக்கும் லாபம் கட்சிக்காரர்களுக்கே!
இதில் ஒரு பங்கு மின்சார வாரியத்தின் நஷ்டத்தை ஈடு செய்யக் கொடுத்திருந்தால், மின் கட்டணம் உயர்ந்திருக்காதே!

No comments: